கேரட் அல்வா செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
கேரட் - 2
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
ஏலக்காய் பவுடர் - சிறிதளவு
முந்திரி பருப்பு - 10
செய்முறை:
 
முதலில் கேரட்டை தோலுரித்து துருவியில் வைத்து நன்றாக துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி  பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாலை ஊற்றி கேரட்டை போட்டு வேக விடவும். பால் நன்றாக வற்றும் வரை  கிளறவும்.
 
கேரட் வெந்ததும் சீனியும், கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.  இறுதியில் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரட் அல்வா தயார்.

எல்லாம் காட்டு

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

அடுத்த கட்டுரையில்
Show comments