1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (15:06 IST)

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி; தங்கத்தை தட்டிய பிரியா மாலிக்!

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் பிரியா மாலிக்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையே ஹங்கேரி நாட்டில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரியா மாலிக் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிரியா மாலிக்கின் இந்த வெற்றிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.