செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (15:56 IST)

ஐயோ!! தேர்தல்ல நிற்கனும்னா ’இத்தனை’கோடி வேணுமாம்ல

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. அதன்பிறகு அதிமுக கட்சியுடன்தான் இணக்கமாக உள்ளது. தற்போது அனைத்து கட்சியினரும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி வைத்துள்ள நிலையில் தனது தேர்தல் நிலைப்பாடு  குறித்து வரும் 5 ஆம் தேதி  அறிவிப்பதாக இக்கட்சியின் தலைவர்  சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிஅய் மாவட்டங்களில் நடைபெற்ற  கட்சி சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு சென்றார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
 
தேர்தலில் நிற்க வேண்டுமெனில் ஒருவருக்கும் ரூ. 30 கோடி முதல், ரூபாய் 40 கோடி வரை பனம் தேவைப்படுகிறது. மேலும் தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் வரும் நாடாளூமன்ற தேர்தலுக்கு கட்சியின் முடிவுகள் வரும் 5 ஆம் தேதி அறிவிக்கப்படுமென  அறிவித்தார்.
 
மேலும் கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.