Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் விஜயகாந்திற்கு சிலை வைக்கப்படுமா?.. மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

Written By Senthil Velan
Updated: புதன், 3 ஜனவரி 2024 (10:11 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 
தமிழ் திரைத்துறை நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்
நல குறைவால் காலமானார். மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்திற்கும் மதுரைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. 
 
விஜயகாந்த்க்கு மதுரையில் வெங்கல சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயகாந்தின் முழு உருவ சிலையை மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில்  அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

எல்லாம் காட்டு

டெல்லியில் செப் 12ல் தொடங்கும் பிரிக்ஸ் மாநாடு.. ரஷ்ய, சீன அதிபர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு..

காங்கிரஸ், பாஜக அல்லாத 3வ்து கூட்டணி.. சிஜேபி, ஆம் ஆத்மியுடன் திமுக கூட்டணியா?

தவெக ஆட்சிக்கு முடிவு!.. திமுக மாஜி அமைச்சர்கள் போட்ட ரகசிய மீட்டிங்?!..

நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!.. தேடும் பணி தீவிரம்!...

நேபாளத்தில் வெள்ளம்!.. 83 தமிழர்களின் நிலை என்ன?.. ராஜ்மோகன் விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments