Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமை குறித்து MGR உயிலில் குறிப்பிட்டது என்ன?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 4 ஜூலை 2022 (14:45 IST)
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர் என கு.ப.கிருஷ்ணன் பேட்டி. 

 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனிடையே முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளதாவது, ஈபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில் படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர்.
 
இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

நேபாளம் பேரழிவு எதிரொலி.. சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

29 வயதில் ரிட்டயர்டு ஆன இளம்பெண்.. என்னால் இனிமேல் கார்ப்பரேட்டில் வேலை செய்ய முடியாது...

வெயிட் பண்ணுங்க ப்ரோ.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பாஜக எம்பி கங்கனா ரனாவத்

அத்திப்பட்டி போல பல கிராமங்களை காணவில்லை.. நேபாளத்தில் வரலாறு காணாத இயற்கை பேரழிவு..

திருவண்ணாமலை கோவிலுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல முடியாது.. புதிய கட்டுப்பாடு...

அடுத்த கட்டுரையில்
Show comments