Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுக: விஜயகாந்த் வலியுறுத்தல்

Written By siva
Updated: செவ்வாய், 2 நவம்பர் 2021 (17:12 IST)
முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றுங்கள் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வலியுறுத்தி உள்ளார் 
 
இன்று சென்னை தலைமை செயலகம் அருகே மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கவிதா அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பராமரிப்பு இல்லாமல் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்
 
மேலும் குண்டும் குழியுமான சாலை உடனே செப்பனிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் காவலர் கவிதா உடல் நசுங்கி உயர்ந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம்.. எல்லாம் ஏஐ தான் காரணம்..

19 வயது காதலி கர்ப்பம்.. சந்தேகம் அடைந்த காதலன் விஷம் கொடுத்து கொலை... அதிர்ச்சி சம்பவம்...

நேபாள பேரிடர்.. டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 இந்தியர்கள்...!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கர்.. கிராம மக்கள் உடைத்து பங்கு போட்ட சம்பவம்..

விஜய் தான் பிரதமர் வேட்பாளரா? உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன பதில்..

அடுத்த கட்டுரையில்
Show comments