1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:43 IST)

தலைமை செயலகத்தில் திடீரென சாய்ந்த மரம்! – பெண் காவலர் பலி!

சென்னை தலைமை செயலத்தின் முகப்பில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்கு பருவமழையாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மழைக்காரணமாக சென்னை தலைமை செயலகம் முகப்பில் உள்ள மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவிதா என்ற பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் ஒரு போக்குவரத்து காவலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.