சினிமாவ விட இது வித்தியாசமா இருந்துச்சு.. எனக்கு இது புதுசு! – செஸ் ஒலிம்பியாட் குறித்து விக்னேஷ் சிவன்!

புதன், 10 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
சென்னையில் நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை இயக்கியது குறித்து இயக்குனர் விக்னேஷ்சிவன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள விக்னேஷ் சிவன் “திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு என்பது திரைப்படங்களை விட வித்தியாசமானது. எனக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்கூட்டிய அனுபவங்கள் கிடையாது. இதுவே முதல்முறை. நல்ல டீம் இருந்ததால் சிறப்பாக செயல்பட முடிந்தது” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments