Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயர்வை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - டிடிவி ஆதங்கம்!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 2 ஜூலை 2021 (14:35 IST)
விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி தினகரன் டிவிட். 

 
தமிழகம் உள்பட பல நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டியதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில், இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.
 
பெட்ரோல் - டீசலுக்கு  வாட்  வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு  உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

எல்லாம் காட்டு

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

இந்தியாவில் லாவா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் விராட் வி1 ப்ரோ 5ஜி: பட்ஜெட் விலையில் இவ்வளவு சலுகைகளா?

அடுத்த கட்டுரையில்
Show comments