வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (11:13 IST)

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!

தேசிய அளவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொட்டுள்ள நிலையில், அதை கண்டித்து கோவையில் இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது. இதை கண்டித்து கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் டயர், நொங்கு வண்டி ஆகியவற்றை சாலையில் ஓட்டி சென்று நூதனமான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.