இதுதான் திமுகவின் திராவிட மாடலா? சீண்டும் டிடிவி!

செவ்வாய், 29 மார்ச் 2022 (13:03 IST)
பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளாம்பட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், சுமார் 50 கும் மேர்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்யக் கூறி ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளிக்கல்வித் தலைமையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்கூடக் கழிவறையை சுத்தம் செய்வதாக வெளியாகியிருக்கும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது. 
 
புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா? இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? இனி, இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திடக்கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து படிக்கும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.

எல்லாம் காட்டு

பதவி கிடைக்கலன்னு ஃபீல் பண்ணாதீங்க.. அடுத்த எலக்சன் வருது!.. அமைச்சர் ஆனந்த்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் பேசிய விஜய்!.. பின்னணி என்ன?..

காவலர் கையை தவெகவினர் முறித்ததாக வந்த செய்தியும் பொய்.. இன்னும் எத்தனை பொய்தான் பரப்புவீங்க?

மக்களின் ஆதரவில் உருவான விஜய்க்கு எதற்கு ஊடக அங்கீகாரம்.. மக்கள் தான் மிகப்பெரிய ஊடகம்.

கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments