தமிழகத்தில் வெல்லப்போவது யார்? எக்சிட்போல் முடிவுகள்

ஞாயிறு, 19 மே 2019 (19:02 IST)
இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக எக்சிட்போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என எக்சிட்போல் தெரிவித்துள்ளது.
 
அதாவது திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகள் வரையும் பெற வாய்ப்பு இருப்பதாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் நியூஸ்18 எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 12-14 தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பா.ஜ.க 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தே.மு.தி.க 1-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.
 
ஆனால் டைம்ஸ் நவ் எக்சிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகள் குறித்த கருத்துக்கணிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments