தமிழகத்தில் வெல்லப்போவது யார்? எக்சிட்போல் முடிவுகள்

ஞாயிறு, 19 மே 2019 (19:02 IST)
இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக எக்சிட்போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என எக்சிட்போல் தெரிவித்துள்ளது.
 
அதாவது திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகள் வரையும் பெற வாய்ப்பு இருப்பதாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் நியூஸ்18 எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 12-14 தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பா.ஜ.க 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தே.மு.தி.க 1-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.
 
ஆனால் டைம்ஸ் நவ் எக்சிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகள் குறித்த கருத்துக்கணிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments