கொரோனா இருந்தால் பிரச்சாரத்திற்கு தடை! – உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள்!

வியாழன், 27 ஜனவரி 2022 (13:13 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள், பாதிப்பு தெரிய வந்தால் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. மேலும் மதுரை, திருச்சி, சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1400 வாக்காளர்கள் என்ற வீதத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன், திரையுலகினர் சந்திப்பு.. அரசு சார்ப்பில் ஓடிடி தொடக்கமா?

கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி? முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம்!.. அமைச்சர் ராஜ்மோகன் அறிமுகம்!..

பள்ளிகள் திறப்பது எப்போது?.. கல்வி அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!..

கூண்டோடு தவெகவுக்கு மாறிய அமமுக நிர்வாகிகள்!.. டிடிவி தினகரன் ஷாக்!..

அடுத்த கட்டுரையில்
Show comments