Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்! – தொடர்ந்து சேதமாகும் தலைவர் சிலைகள்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 31 ஜூலை 2020 (10:30 IST)
சமீப நாட்களாக தமிழக தலைவர்கள் சிலை சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது திருவள்ளூரிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது, அண்ணா சிலை அருகே காவிக்கொடி வைத்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. தலைவர்கள் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது திருவள்ளூரில் மீண்டும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments