”சங் பரிவார் சதிக்கு பலியாகாமல் இருங்கள்”; ரஜினியை எச்சரிக்கும் திருமா

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (18:19 IST)
சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியை ஒட்டி நடந்த விழாவில் ராமர், சீதையின் உருவப் படங்கள் ஆடையில்லாமல் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் இதழ் துணிச்சலாக பிரசுரம் செய்ததாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து ரஜினி கூறியது பொய் என்றும் இது பெரியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாகவும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சங் பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்,திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர், ”சமூக நீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துக்கொள்ள முடியும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

நாளை UPSC Prelims தேர்வு.. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

டேட்டிங் செயலிகளில் போலி போலீஸ் அதிகாரி போல் நடிப்பு.. 21 பெண்களை ஏமாற்றிய மோசடி நபர் கைது..!

டெல்லி - நொய்டா விமான நிலையத்தின் பயண நேரம் வெறும் 21 நிமிடங்கள்.. வருகிறது அதிவேக விரைவு ரயில்..

ஐஏஎஸ் ஐபிஎஸ் மாப்பிள்ளை ரூ.5 கோடி.. எஸ்.எஸ்.எல்.சி. மாப்பிள்ளை ரூ.25 லட்சம்.. இந்திய திருமண சந்தையில் வரதட்சணை ரேட்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாகன விளம்பரம்.. அசத்தும் அரசு பள்ளிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments