புதுவையில் ஆட்சி அமைக்க பாஜக சதி, திமுக தலையிட வேண்டும்: திருமாவளவன்

செவ்வாய், 11 மே 2021 (14:45 IST)
புதுவையில் ஆட்சி அமைக்க பாஜக சதி செய்வதாகவும் உடனடியாக இதில் திமுக தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பாஜக சதி செய்கிறது என்றும் மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் எனவே திமுக உடனே தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்
 
நட்புக்கும் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்ஆர் காங்கிரஸ் இந்நிலையிலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். புதுவையில் 10 என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏகளும் 6 பாஜக எம்எல்ஏக்களும் உள்ள நிலையில் நியமன உறுப்பினர்களாக மூன்று பாஜக எம்எல்ஏக்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும் 6 சுயேச்சைகள் புதுவையில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகிறது. இதனை அடுத்து திருமாவளவன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

எல்லாம் காட்டு

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?

பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments