Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 5 ஜூலை 2024 (18:02 IST)
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. 
 
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை  திரும்பப் பெறும் திட்டம்  அமல்படுத்தப்படும் என  தெரிவித்தார்,.
 
மேலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில்,  தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
அதற்கு பதிலளித்த டாஸ்மாக் தரப்பு சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments