ஈ, காக்கை கூட இல்லாத சாலைகள்! – தமிழகத்தின் இன்று முழு ஊரடங்கு!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:45 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6ம் தேதி முதலாய் அமலில் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல இந்த மாதம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

கரூர் நெரிசல் சோக சம்பவம்.. காயம் அடைந்தவர்களுக்கு தவெகவில் இருந்து நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

குஜராத்தில் பேய்மழை.. 10 நிமிட மழையால் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.. தவிக்கும் வணிகர்கள்...

தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி விவகாரம்.. மேலும் 2 பேர் கைது..

இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி...

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments