Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ, காக்கை கூட இல்லாத சாலைகள்! – தமிழகத்தின் இன்று முழு ஊரடங்கு!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:50 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6ம் தேதி முதலாய் அமலில் இருக்கும் நிலையில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல இந்த மாதம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை கார்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments