இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை உத்தரவு

வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:02 IST)
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ்ப்பாடம் கட்டாயம் உண்டு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள ஒரு சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிப் பாடத்தை நடத்த வில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து அமைச்சர் பொன்முடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் 
 
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ் கட்டாயம் என்றும் இதை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தாய்மொழி கல்வியை கல்லூரி மாணவர்களுக்கு புகுத்துவதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல்...

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8-வழிச்சாலை.. மத்திய அரசிடம் நிதி கேட்ட தமிழக அரசு...!

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments