இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை உத்தரவு

வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:02 IST)
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ்ப்பாடம் கட்டாயம் உண்டு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள ஒரு சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிப் பாடத்தை நடத்த வில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து அமைச்சர் பொன்முடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் 
 
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ் கட்டாயம் என்றும் இதை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தாய்மொழி கல்வியை கல்லூரி மாணவர்களுக்கு புகுத்துவதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments