சூர்யாதேவிக்கு கொரோனா பாசிட்டிவ்: விசாரணை செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனாவா?

ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:38 IST)
சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்த வனிதா குறித்து பல திரையுலகினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் சூர்யாதேவி என்ற பெண் யூடியூபில் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து சூர்யாதேவி மீது வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் 
 
அதன்பின் நீதிமன்றத்தில் சூர்யாதேவி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்பதும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வனிதா- சூர்யாதேவி விவகாரம் சற்று அடங்கி உள்ள நிலையில் திடீரென சூர்யாதேவிக்கு கொரோனா என்று வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
சூர்யா தேவியை மட்டுமின்றி அவரை விசாரணை செய்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி என்பவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து சூர்யாதேவி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பெண் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சூர்யா தேவி மற்றும் வனிதா விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவலால் மீண்டும் ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments