கோரிக்கை ஏற்பு: முன்கூட்டியே விடுதலையாகிறாரா சுதாகரன்?

வியாழன், 17 டிசம்பர் 2020 (11:28 IST)
கோரிக்கை ஏற்பு: முன்கூட்டியே விடுதலையாகிறாரா சுதாகரன்?
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் சுதாகரன் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை முன்கூட்டியே சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுதாகரன் கோரிய மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுதாகரன் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சுட்டிக்காட்டியதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது 
 
எனவே நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுதாகரன் எந்த நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி செல்லாது: காலம் கடந்து வந்த தீர்ப்பால் என்ன பலன்?

இன்னொரு ராஜ்யசபா தொகுதி.. ஓசியில் பெற்ற காங்கிரஸ்.. 6 மாதங்களுக்கு முன் திமுகவிடம்.. இப்போது தவெகவிடம்..

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!

பொறியியல் கல்லூரிகளில் 1000 போலி பேராசிரியர்கள்.. 5 வருடங்களாக தூங்கி கொண்டிருந்த திமுக அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments