திராவிட மாடல் அரசு நடந்துகிட்டு இருக்கு.. நேற்று பொங்கிய மாணவரின் பழைய வீடியோ வைரல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:26 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஜெகதீஷ் என்ற மாணவர் இறந்த நிலையில் அந்த மாணவரின் நண்பர் என்று கூறப்படும் ஒரு மாணவர் நேற்று  ஊடகங்கள் முன் பொங்கினார். 
 
அவர் நீட் தேர்வு எதிராக கேட்ட கேள்விகள் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த மாணவர்  பேசிய பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ’வட இந்தியா போல் தமிழ் நாட்டை நினைத்துக் கொண்டிருக்கின்றனர், இது பெரியார் வாழ்ந்த மண், அம்பேத்கர் வாழ்ந்த மண், திராவிட மாடல் அரசு இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். 
 
இதிலிருந்து இவர் பக்கத்து திமுககாரர் என்பதும் தெரியவருகிறது. எனவே நேற்றைய பேட்டி கூட திமுகவினர் செட்டப் செய்ததா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக நேற்று அமைச்சர் உதயநிதி பொங்கியது எல்லாம் நடிப்பா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்விகளுக்கு இந்த மாணவர் என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://twitter.com/Johni_raja/status/1691164945482944512
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகளுடன் இணையாமல் தனியாக போராட்டம் நடத்திய திமுக எம்.பிக்கள்.. ஏன்?

வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த விரைவு நீதிமன்றங்கள் - பிரதமர் மோடி உறுதி!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments