வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:55 IST)

சிங்கப்பூரில் மொட்டை கிருஷ்ணன்.. இண்டர்போல் உதவியை நாடிய தனிப்படை போலீஸ்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மொட்டை கிருஷ்ணன் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து அவரை பிடிக்க இன்டர்போல் உதவியை தனிப்படை போலீசார் நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை சுமார் 20 பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மொட்டை கிருஷ்ணனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் சிங்கப்பூரில் 10 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

சம்போ செந்தில்  கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக  லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran