Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!

Updated: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:36 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று சபாநாயகர் அறையில் ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனை அவரது ஆதரவாளர்கள் அமோகமாக கொண்டாடினர்.
 
தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் இருந்தார் சபாநாயகர் தனபால்.
 
இதனையடுத்து சபாநாயகர் தனபால், இங்கே இப்படியெல்லாம் கத்தக்கூடாதுன்னு சொல்லுங்க என தினகரனிடம் கோரிக்கை வைத்தார். அதனை கேட்டு சிரித்தபடியே அமைதியாக இருங்க என கையை வைத்து சைகை காட்டினார் தினகரன்.

எல்லாம் காட்டு

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..

மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசா கார்டு.. ஒரே இரவில் 2600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி..

தமிழக பட்ஜெட் 2026-27.. எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி.. முழு விவரங்கள்...!

மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் ஆடு, மாடுகள் வளர்ப்பு திட்டம்.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..

கல்வித்துறைக்கு வாரி வழங்கிய தவெக அரசு.. ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு

அடுத்த கட்டுரையில்
Show comments