சீர்காழியில் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிறிய வகை செயற்கைக்கோள் ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் சுமார் மூன்று முதல் 8 மணி நேரம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு தட்பவெட்ப, வாயு அழுத்தம், காற்றின் மாறுபாடு, வளிமண்டல மாறுபாடு போன்ற தரவுகளை பதிவு செய்யும்.