குறித்த தேதிக்கு முன்னால் சசிகலா எண்ட்ரி; அதிமுகதான் இலக்கு! – அமமுக பொருளாளர்!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:09 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலை தேதிக்கு முன்னரே ரிலீஸ் செய்யப்படுவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ல் விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் அமமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிகலா விடுதலை குறித்து பேசியுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் “2021 ஜனவரி 27ம் தேதி வரைதான் சசிகலாவை சிறையில் வைத்திருக்க முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே சசிகலா விடுதலையாகி வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபடுவார்” என்று கூறியுள்ளார்.

மேலும் “அதிமுக தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார்” என்றும் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments