எழுந்து நடக்கிறார் சசிக்கலா.. உடல்நிலையில் முன்னேற்றம்! – மருத்துவமனை அறிக்கை!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:40 IST)
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா எதிர்வரும் 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சசிக்கலா ரத்தத்தில் 97% ஆக்ஸிசன் இருப்பதாகவும்,  உடல்நலமாக இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments