Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அதிசயம்-அற்புதம் நிகழலாம்: கமல் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

Updated: திங்கள், 18 நவம்பர் 2019 (07:11 IST)
நேற்றும், இன்றும் நடந்த அதிசயம், அற்புதம் நாளையும் நடக்கலாம் என ‘கமல்ஹாசன் 60’ விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று சென்னையில் ’கமல்ஹாசன் 60’ விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நான்கு மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு  மேல் நீடிக்காது என்று அனைவரும் கூறினர். தமிழகத்தில் உள்ள 99 சதவிகித மக்கள் இதனை கூறினாலும், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது, ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது.
 
எனவே நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்கும் அற்புதம் போல் தனது ஆட்சியும் மலரும் என்று அவர் மறைமுகமாக கூறியதை கேட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

எல்லாம் காட்டு

25 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி நபர்.. அதில் ஒரு பெண் பாஜக எம்.எல்.ஏவின் மகள்...

வினாடி வினா போட்டியில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..

மம்தா பானர்ஜி மீது கல்வீச்சு, சேறு வீச்சு.. இறந்த தொண்டரின் வீட்டுக்கு சென்றபோது நடந்த சம்பவம்...

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள்.. கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்..

விஜய் டிவியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி... நடுவர்கள் ஓவியா, ஆரி, ராஜூ..

அடுத்த கட்டுரையில்
Show comments