Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் விடுதலைக்கு போராடியவர்களுக்கு நன்றி! – விடுதலையான பேரறிவாளன்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 18 மே 2022 (13:16 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் தனது விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைத்து எனக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த 31 ஆண்டுகாலமாக இடைவிடாது போராடிய தனது தாய்க்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், தனது விடுதலைக்காக உயிர்விட்ட தங்கை செங்கொடியின் தியாகம்தான் தன்னை தொடர்ந்து விடுதலை நோக்கி உந்தியதாக தெரிவித்துள்ள அவர், தனக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், குரல் கொடுத்த மக்கள், மாநில அரசு மற்றும் பத்திரிக்கைகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

நேபாளம் பேரிடர்.. உயிரை காப்பாற்றி கொள்ள சீனாவில் தஞ்சமடைந்த 400 இந்தியர்கள்...

தலித் சமுதாயத்தை பரிதாபமாக பார்ப்பது ஏன்?!.. சட்டசபையில் பொங்கிய வன்னியரசு!...

10 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்த நேபாள அரசு...

மனுஸ்மிருதி குறித்து தவறாக பேசுவதா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்... சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி

ChatGPT என தெரியாமல் வெளிநாட்டு பெண் என நினைத்து க்யூட்டாக பேசும் பாட்டி.. வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments