தூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா?

வியாழன், 24 மே 2018 (08:56 IST)
தூத்துகுடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து தூத்துகுடியை நோக்கி துணை ராணுவம் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்னும் தூத்துகுடியில் அமைதி திரும்பவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடும் வரையிலும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்களின் தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தூத்துகுடியில் பதட்டம் நீடித்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பு நிலை திரும்ப துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும், இதன்படி துணை ராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments