தூத்துகுடியில் துணை ராணுவம்: அமைதி திரும்புமா?

வியாழன், 24 மே 2018 (08:56 IST)
தூத்துகுடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து தூத்துகுடியை நோக்கி துணை ராணுவம் விரைந்து சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்னும் தூத்துகுடியில் அமைதி திரும்பவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடும் வரையிலும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்களின் தரப்பில் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தூத்துகுடியில் பதட்டம் நீடித்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பு நிலை திரும்ப துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும், இதன்படி துணை ராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments