தறிகெட்டு பைக்குகளை மோதி வீசி சென்ற வேன்! – ஒட்டன்சத்திரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 20 மே 2022 (12:28 IST)
திண்டுக்கல் மார்க்கெட்டிலிருந்து சென்ற மினிவேன் ஒன்று எதிரே வந்த பைக்குகள் பலவற்றை மோதி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை லோடு ஏற்றிக் கொண்டு மினிவேன் ஒன்று கோவை புறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே பைபாஸில் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு பலகையை உடைத்துக் கொண்டு எதிர் சாலையில் பாய்ந்த வேன் அங்கு சென்றுக் கொண்டிருந்த பைக்குகளையும் மோதி வீசிக்கொண்டு சென்றது. இதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிய நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

சினிமா பாத்து சீன் போடுறது இல்ல ஆட்சி!.. தவெகவை விளாசிய பிரேமலதா!..

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments