இன்று முதல் ஆம்னி பேருந்து இயங்காது... சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிக்கல்..!

செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:18 IST)
இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை திரும்பும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் இன்றும் மாலை முதல் சென்னை திரும்ப உள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் என கூறி 120 பேருந்துகளை சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றார் கோரிக்கையை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனால் ஏற்கனவே ஆம்னி பேருந்துகளில்  முன்பதிவு செய்தவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments