Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் அதி கனமழை முதல் கனமழை

Written By Sugapriya Prakash
Updated: புதன், 10 நவம்பர் 2021 (12:22 IST)
தமிழகம் முழுவதும் அதி கனமழை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களுக்கு பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.  
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை , சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும். 
 
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை.. ஒட்டுமொத்த சிஸ்டமும் அவரை காப்பாற்றிவிட்டது.. வினேஷ் போகத் அதிருப்தி..

அரசியல்கட்சி துவங்கமாட்டோம்!.. அது வேஸ்ட்!.. CJP நிறுவனர் அபிஜீத் திப்கே பேட்டி!..

முதல்வர் விஜய் கடவுளின் குழந்தையா?!.. பைத்தியக்காரங்களா!.. சீமான் கோபம்!.

இந்தியா வளருதுன்னா ஏன் துபாய்ல இருக்கீங்க?!.. மாதவனை வெளுத்த ராஜ் தாக்கரே!..

அடுத்த கட்டுரையில்
Show comments