செம! இந்த ஒரே வார்த்தையால் நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் சுசீந்திரன்

வியாழன், 26 ஏப்ரல் 2018 (09:31 IST)
பிரபல இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு' செம' என்று டுவீட் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
ஏனெனில் இதே சுசீந்திரன் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என்று செய்தி வந்தபோது 'செம' என்று டுவீட் போட்டிருந்தார்.
 
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து ஆனதும் சந்தோஷப்பட்டு டுவீட் போட்ட சுசீந்திரன், தற்போது அதே சந்தோஷத்துடன் ஐபிஎல் போட்டியை ரசித்து டுவீட் போட்டுள்ளது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். சுசீந்திரனின் இந்த செயல் மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் செயல் என்று டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments