நெல்லை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த வழக்கு: பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:47 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது 
 
மனுதாரர் இரண்டு பேருமே விபத்து நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அந்த பள்ளியில் பொறுப்பேற்றுள்ளனர் என்பதால் இவர்கள் இருவரும் இந்த விபத்திற்கு பொறுப்பேற்க முடியாது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது 
 
இந்த மனுவில் கூறப்பட்டு இருந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதி நெல்லையில் சுற்றுசுவர் இடிந்து மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments