1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:45 IST)

பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுச்சேரி யூனியனில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மா நிலக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 அதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு முக்க் கவசம் அணிந்து வர வேண்டும். கிருமி நாசிகளைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்த  பின் மாணவர்களை  வளாகத்திற்குள் அனுப்ப வேண்டும்.  மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அளவீடு செய்த பின் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பேண்டும் ;பரிசோதனையில் உடல் வெப்ப நிலை இருப்பவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.