Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரயில்.. பயணிகள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 28 டிசம்பர் 2023 (07:47 IST)
ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரயில் சேவை இனி செங்கோட்டை வரை நீடிக்கும் என்றும் இதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது

 இது குறித்து தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில் எண். 16846 திருநெல்வேலி - ஈரோடு எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக ரயில் எண் 16845 ஈரோட்டில் இருந்து மதியம் 1.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டை வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால் அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், சேரன்மாதேவி வழியாக செங்கோட்டை செல்லும்

 மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவை அனைத்தும் சிவகாசி வழியாக செல்கின்றன. ஆனால் அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த ரயில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

எல்லாம் காட்டு

லார் கிப்பான் குரங்கே எங்கே?.. சியான் விக்ரமுக்கு 3 நாள் கெடு!.. வனத்துறை அதிரடி!...

வி-வடிவ உடற்கட்டை உருவாக்குவது எப்படி: அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரின் மகன் ஜோசப் பேனா அறிவுரை..

திமுக ஆட்சியின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து!.. தவெக அரசு அதிரடி...

பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் வந்தே மாதரம்.. பாராளுமன்றத்தில் இதுவே முதல்முறை..

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்த பேங்க் ஆப் அமெரிக்கா.. ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் அல்ல ரூ. 18,268 கோடி ரூபாய்...

அடுத்த கட்டுரையில்
Show comments