பிராமணர்களுக்கு நலவாரியம் வேண்டும் – சட்டசபையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ கோரிக்கை !

சனி, 20 ஜூலை 2019 (09:26 IST)
சட்டசபையில் நேற்று பேசிய முன்னாள் போலீஸ் அதிகாரியும் மயிலாப்பூர் எம்.எல்..வுமான நட்ராஜ் பிராமணர்களுக்குத் தனியாக வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சட்டசபையில் கடந்த சில நாட்களாக காவல்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் நேற்றுப் பேசிய முன்னாள் காவல் அதிகாரியும் தற்போதைய மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ் பிராமணர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டுமெனக் கூறினார்.

அவர் ‘மயிலாப்பூர் தொகுதி வாழ் பிராமணர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா அமைத்தது போல் பிராமணர்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள். ஏற்கனவே அமைக்கப்பட்ட அர்ச்சகர்கள் ,கிராம பூசாரிகளுக்கு நலவாரியங்கள் சிறப்பாக செயல்படவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசின் கனிவான கவனத்திற்கும் பரிசீலனைக்கும் வைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!.. கேரள ஆளுநர் அறிவிப்பு...

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்!.. ஆளுநரிடம் அதிமுக அழுத்தம்!...

இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?!.. குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி!..

அடுத்த கட்டுரையில்
Show comments