Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரித்தேஷை கழுத்து அறுத்து கொன்றேன்: கொலையாளி வாக்குமூலம்

Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (15:56 IST)
சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த சிறுவனை கழுத்து அறுத்து கொலை செய்ததாக கொலையாளி  போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளான்.
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 10 வயதில் ரித்தேஷ் சாய் என்ற மகன் இருக்கிறான். ரித்தேஷ் சாயின் அம்மா மஞ்சுளாவுக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நாகராஜனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அவரது மகன் இடையூராக இருந்துள்ளான். 
 
இதனால் நாகராஜன் டீயூசனுக்கு சென்ற சிறுவனை, சேலையூரில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்று கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான்.இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் நாகராஜனையும், மஞ்சுளாவையும் கைது செய்து விசாரித்தனர் 
 
இந்நிலையில் சிறுவன் கொலை குறித்து நாகராஜன் போலீஸுக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, டியூஷனில் இருந்து ரித்தேஷை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி எனது சேலையூர் வீட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கே வீட்டில் இருந்த பீர் பாட்டிலை வைத்து கழுத்தை அறுத்தேன். அப்போது ரீத்தேஷ் மாமா என்னை விட்டுவிடுங்கள் என் கெஞ்சினான். ஆனால் நான் அவனை மேலும் இரும்பு கம்பியால் அடித்து துடிக்கதுடிக்க கொலை செய்தேன் என கூறியிருந்தான்.

எல்லாம் காட்டு

எனக்கு சுகர்!... வேதனையா இருக்கு!.. சட்டசபையில் ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!...

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?

இளைஞரை அறைந்த எஸ்.ஐ!.. திருப்பி அறைந்த இளைஞர்!.. விசிக போராட்டத்தில் பரபரப்பு!. (வீடியோ)..

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments