நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: இன்று நடக்கவிருந்த தொடக்க விழா திடீர் ஒத்திவைப்பு..!

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:10 IST)
இன்று நடைபெற இருந்த நாகை - இலங்கை பயணிகள் கப்பல் தொடக்க விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்க விழா அக்டோபர் 10ஆம் தேதி அதாவது இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொடக்க விழா அக்டோபர் 12ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதால் தொடக்க விழா மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  40 ஆண்டுகள் கழித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது.   இன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகப்பட்டினத்துக்கும் வரும் 12ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் இ-விசா கட்டாயம். இதில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் அதிகபட்சம் 50 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த கப்பலில் பயணம் செய்ய ரூ.7500 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

எல்லாம் காட்டு

34 ஆண்டுக்கு முந்தைய கொலை வழக்கு.. 84 வயது முதியவருக்கு சிறை தண்டனை.. கைத்தாங்கலாக அழைத்து சென்ற காட்சி...

மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையையே பாஜக முடிச்சிடுச்சு.. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை விஜய் முடிச்சிட்டாரு.. நாடு சுத்தமாகி கொண்டு வருகிறது.. அரசியல் விமர்சகர்கள்

யார் சொன்னது அதிமுகவுக்கு வாக்கு குறைஞ்சிருச்சுன்னு.. தவெகவை அடுத்து அதிமுகவுக்கு மட்டும் தான் வாக்கு அதிகரிச்சிருக்கு... புள்ளி விவரங்கள்..

போலீஸ் எப்பவுமே நல்லவங்க தான்.. அரசியல்வாதிங்க அவங்களை கட்டுப்படுத்துறாங்க: பொதுமக்கள் கருத்து

கோயம்பேட்டில் கார் மோதிய சம்பவம்!. மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments