சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:36 IST)

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 
 
இன்று பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எந்த நிலையிலும் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
அதோடு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும் என குறிப்பிட்டார்.