கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்! – திமுக குறித்து ஜெயக்குமார்!

திங்கள், 11 நவம்பர் 2019 (16:05 IST)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில் அதை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் போட்டி குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அதிமுக படுவேகமாக செயலாற்றி கொண்டிருக்கிறது. மத்திய 13 ஆண்டுகள் அங்கம் வகித்தபோதும் திமுக தமிழகத்திற்காக எதையுமே செய்யவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆலோசனை நடத்துவது கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments