அமைச்சரிலிருந்து பாடகராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்

ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (15:16 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி அசத்தினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால் சென்னை முழுவது பல இடங்களுல் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இவ்விழாவில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அங்கிருந்த அமைச்சர் ஜெயக்குமாரை எம்ஜிஆர் பாடல்களை பாடுமாறு கட்சியினர் வலியுறுத்தினர். 
கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் அழகிய தமிழ்மகள் இவள் என்ற பாடலை பாடினார். பின்னர் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். அங்கிருந்தவர்கள் அமைச்சரின் பாடல்களுக்கு பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.
 
அமைச்சர் ஜெயக்குமாருக்கு இப்படியொரு தனித்திறமை இருக்கிறதா என சமூக வலைதளங்களில் பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

பழனி கோவில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?.. பத்திரம் சொல்வது என்ன?..

டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!

பாஜக ஆட்சிக்கு எதிராக திரண்ட இளைஞர்கள்.. தமிழகம் போல் மத்தியிலும் ஆட்சியை மாற்றுவார்களா ஜென் சி?

பேய் வீட்டில் ஒரு நைட் தங்கினா ரூ.52 ஆயிரம் சம்பளம்!.. நீங்க ரெடியா?..

லிவ்விங் டூ கெதரில் இருந்தால் 5 வருஷம் சிறை!.. மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments