திடீரென இசைக்கலைஞராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்

திங்கள், 21 ஜனவரி 2019 (11:08 IST)
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயகுமார் மேளம் அடித்தது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
 
தமிழக அமைச்சர்களில் பேமஸ் ஆனவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். தினமும் 11 மணி ஆனால் டானென செய்தியாளர்கள் முன்னிலையில் ஆஜராகி பல விஷயங்களை பகிர்வார். 
 
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் திடீரென மேளத்தை அடித்தபடி ஊர்வலம் சென்றார். இதனால் பரவசமடைந்த இளைஞர்கள் சந்தோஷத்தில் டான்ஸ் ஆடினர். அமைச்சர் ஜெயக்குமார் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் இப்படி திடீரென இசைக்கலைஞராக மாறி பலரை குத்தாட்டம் போட வைப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments