கோவையில் மாஸ்க் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

புதன், 22 நவம்பர் 2023 (08:04 IST)
கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 
 
எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  
 
காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

போலீஸ் சிரிக்கவே கூடாதா?!.. காவல்துறைக்கு முட்டு கொடுக்கும் வன்னியரசு!..

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..

10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments