கோவையில் மாஸ்க் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

புதன், 22 நவம்பர் 2023 (08:04 IST)
கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 
 
எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  
 
காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மொத்தம் 1,36,939 எம்பிபிஎஸ் சீட்.. கர்நாடகா முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. முழு விவரங்கள்...

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் குழுவில் ரகுராம் ராஜன்: கொள்கைகளை மறுஆய்வு செய்ய புதிய அதிரடி நியமனம்!

சென்னையில் நாளை 8 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்பு அதிரடி: 4 மூத்த அதிகாரிகள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்!

பாஜகவுடன் திமுக கைகோர்க்கலாம்: திருமாவளவனின் பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments