Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் மாஸ்க் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

Written By Siva
Updated: புதன், 22 நவம்பர் 2023 (09:12 IST)
கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுவெளியில் செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகிய பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 
 
எனவே காய்ச்சல் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் புளூ காச்சல் பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  
 
காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

விஜய் Sorry கேட்டதை ஸ்டாலின் வெளியே சொன்னது சரியா?!.. இணையத்தில் விவாதம்....

கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் தாயார் பெயர் நீக்கமா? வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments