Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்களுக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட மந்தைவெளி ரயில் நிலையம்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 12 மே 2020 (08:19 IST)
சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அந்த பகுதி பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு இந்த வார இறுதியோடு முடிய இருக்கும் நிலையில் பேருந்து மற்றும் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மந்தைவெளி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மந்தைவெளி தடத்தில் ரயில்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதார விதிகளின்படி அங்கு 28 நாட்களுக்கு தடை தொடரும் என்பதால் கடற்கரை முதல் வேளச்சேசி வரை மந்தைவெளி மார்க்கமாக செயல்படும் அனைத்து ரயில்சேவைகளும் தடைபடும் என கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்!.. ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!..

பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் குத்தி கொலை.. டைம் ஸ்கொயரில் நடந்த விபரீதம்...

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அடுத்த கட்டுரையில்
Show comments