Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Written By siva
Updated: புதன், 21 செப்டம்பர் 2022 (11:24 IST)
ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மதுரை ஆவின் பால் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பாலில் ஈ இருந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரையில் ஆவின் பால் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் ஒன்றில் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மதுரை பல்கலைகழகத்திற்கு அருகேயுள்ள ஆவின் பால் டெப்போவில் அரை லிட்டர் பால் வாங்கிய பெண் ஒருவர் அந்த பாக்கெட்டில் ஈ மிதந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் 
 
உடனே அவர் அந்த பால் பாக்கெட்டை டெப்போவில் திருப்பி ஒப்படைத்த நிலையில் இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பால் பாக்கெட் குறித்த வீடியோ இருந்தால் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர் 
 
மேலும் பேக்கிங் செய்யும் போது இவ்வாறு தவறு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

எல்லாம் காட்டு

ஈரானுடன் போர்!.. அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!..

கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க நவம்பர் 1ம் தேதி வரை கெடு!.. நீதிமன்றம் அதிரடி!...

ஒரே நாளில் 40 டாஸ்மாக் சூப்பர்வைசர்ஸ் சஸ்பெண்ட்!.. தமிழக அரசு அதிரடி!...

கே.என்.நேரு இடங்களில் திடீர் சோதனை ஏன்?.. பின்னணி இதுதானா?...

கேரளாவில் கார் விபத்து! - தமிழக மாணவர்கள் 8 பேர் இறந்தது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments