இரவு முழுவதும் போராடிய மாணவர்கள்.. மசோதா எதிர்ப்பில் தீவிரம்

Arun Prasath
புதன், 18 டிசம்பர் 2019 (10:13 IST)
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று இரவு முழுவது போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

பின்பு இரவில் பல்கலைகழகத்திற்குள் புகுந்த போலீஸார் மாணவர்களை தாக்கினர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், டெல்லி மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் சென்னை பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து டிசம்பர் 23 வரை பல்கலைகழகம் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாகன விளம்பரம்.. அசத்தும் அரசு பள்ளிகள்..!

மத்திய அரசு கொடுத்த பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியை திமுக பயன்படுத்தவில்லையா? திடுக் தகவல்..!

பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தஞ்சை பெரிய கோவில் அகழி.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

மின்வெட்டுக்கு காரணம் ஒருசில கருப்பு ஆடுகள் தான்.. அமைச்சர் நிர்மல் குமார்...

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கினால் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் எச்சரிக்கை...!

அடுத்த கட்டுரையில்
Show comments