அமெரிக்காவில் இருந்து ஹேக் - குஷ்பூ பரபரப்பு புகார்!

செவ்வாய், 20 ஜூலை 2021 (15:33 IST)
அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக குஷ்பூ புகார் அளித்துள்ளார். 

 
தமிழில் பிரபல நடிகையான குஷ்பூ முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரது ட்விட்டர் கணக்கில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கி பெயரை மாற்றியதுடன், அதில் இருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளனர். இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என்ற விவரங்கள் தெரியது இருந்த நிலையில் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே தனது ட்விட்டர் கணக்கை கடந்த 3 நாட்களாக பயன்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்காவில் இருந்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஷ்பூ சென்னை டிஜிபி அலுவலகத்திலும் சைபர் க்ரைம் காவல் துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். மேலும் இவ்வாறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டியுள்ளார். 

எல்லாம் காட்டு

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..

அடுத்த கட்டுரையில்
Show comments