கோயம்பேடு சந்தையில் குறைந்த காய்கறி விலை! – மக்கள் நிம்மதி!

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:11 IST)
கோயம்பேடு காய்கறி சந்தையில் நீண்ட நாட்கள் கழித்து காய்கறிகள் விலை குறைந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்வை சந்தித்தன.

ஆனால் இன்று விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.14 ஆகவும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.30ல் இருந்து ரூ.20 ஆகவும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.

மேலும், கத்தரிக்காய் ரூ.20க்கும், எலுமிச்சை ரூ.110க்கும் விற்பனையாகி வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...

எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன்!.. விபத்தில் 11 வயது சிறுவன் மரணம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments